மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. வாத பித்த சிலேத்துமம் என மூன்றில் அளவு கூடுவதும் குறைவதுமே நோய். "உண்ட உணவு செரித்தபின் போற்றி உண்பவருக்கு மருந்து தேவையில்லை." உணவை சரியாக தீர்மானித்தால் அளவை அறிந்து உண்டால் நோய் வராது. நோய் என்ன ஏன் வந்தது எப்படி தீர்ப்பது எந்த மாதரியான காலத்தில் வந்துள்ளது என்பதை ஆராய்ந்து மருந்து எடுக்க வேண்டும். நோயுற்றவர், அதை தீர்ப்பவர், மருந்துகள், பயன்படுத்தும் அளவு சொல்பவர் என நான்கு கூறுகளை உடையது மருத்துவம்.