வாழ்வில் எத்தனையோ நாட்களை நாம் கடக்கிறோம் எல்லா நாட்களும் ஏதோ ஒரு விதத்தில் நம் முன்னேற்றத்திற்கு ஒரு விதையை விட்டு விட்டுத் தான் செல்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் எத்தனையோ நபர்களை சந்திக்கிறோம் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவித்தில் நம் வாழ்வோடு தொடர்புடையவராகவே இருக்கிறார். ஒவ்வொரு மணித்துளியும் நாம் எத்தனையோ நிகழ்வுகளைக் காண்கிறோம் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு ஒரு செய்தியை சொல்லிவிட்டுத்தான் செல்கிறது. ஒவ்வொரு நிமிடமும் நமக்கு எவ்வளவோ எண்ணங்கள் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன ஒவ்வொன்றும் அடுத்த நொடிக்கான நம் பயணப் பாதையை விரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு நொடியும் பல உணர்வுகள் நம்மை ஊடுருவித்தான் செல்கின்றன ஒவ்வொன்றும் நம் சிந்தையின் செதுக்கள்களாகவே இருக்கிறது. இதை அறியாதவர் பலர். அறிந்தும் உணராதவர் பலர். உணர்ந்தும் உணர்த்தாதவர் பலர். நான் உணர்ந்தேன். உணர்த சிறு பணியை துவக்கியுள்ளேன். இது தேற்றுவதிலும் தேற்றப்படுவது எனும் இன்பம். மொத்தத்தில்... ”யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என திருமூலர் கூறும் திரு மந்திரம். நன்றி!