திருமூலரின் திருமந்திரம். பாடல் எண் 5. சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யோனே. பொழிப்புரை: சிவனோடு ஒப்புமைப்படுத்தி கூறும் தெய்வம் தேடினாலும் இல்லை. அவனுக்கு உவமையாகக் கூறிடவும் எவருமில்லை. அவன் அனைத்தையும் கடந்தவன். பொன்னொளியால் மின்னுபவன்; அவனின் செஞ்சடையோ ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலர் போல் காட்சி நல்குகிறது. விளக்கம்: 'தாமரை காடனைய என்பார் திருவாசகமுடையார். அவன் தனக்கு உவமை இல்லாதவன்.